என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் ரெயில் மோதி 2 பேர் பலி
கோவை:
கோவை இருகூர்-பீளமேடு ரெயில் நிலையம் அருகே டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் சென்ற கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேட்டுப்பாளையம்- கோவை ரெயில்வே தண்டவாளம் துடியலூர் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடலை சோதனை செய்தனர். அப்போது அவரது கையில் பச்சை குத்தப்பட்டு இருத்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X