search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சந்தன கட்டைகளை பதுக்கிய வியாபாரி கைது

    வத்தலக்குண்டு அருகே வீட்டில் 40 கிலோ சந்தன கட்டைகளை பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் அரசு ஆஸ்பத்திரி எதிரே இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது வீட்டில் சந்தனக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், சப்இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டில் 40 கிலோ சந்தன கட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்தனர். இதனை செல்வராஜ் யாரிடம் இருந்து வாங்கினார்? எதற்காக பதுக்கி வைத்திருந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×