search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்.
    X
    கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்.

    கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் 
    வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் 
    மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் 10-ம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும் கல்வி உதவித் தொகை 
    திட்டம் மற்றும் 9 மற்றும் 10-ம் வகுப்புகள் ஆகிய திட்டங்களுக்குரிய இணையதளம்  6.1.2022-ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. 

    இத்திட்டங்களின்கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணவர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல், கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் பெற்று மாணவர்களுடைய கல்வி உதவித் தொகை, விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து 

    கல்வி உதவித் தொகை விண்ணப்பத்துடன் சாதிச்சான்று, வருமான சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்பு கணக்கு, புத்தக நகல் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் கல்வி இணையதளமான escholarship.tn.gov.in மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
    Next Story
    ×