என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போதையில் தந்தையை கத்தியால் குத்திய மகன்
Byமாலை மலர்23 Jan 2022 7:20 AM GMT (Updated: 23 Jan 2022 7:20 AM GMT)
புதுக்கடை அருகே போதையில் தந்தையை கத்தியால் குத்திய மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நாகர்கோவில்:
புதுக்கடை அருகே தவிட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெரோன்ஸ் (வயது 49). கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஜோஸ் மெர்லின் (21). குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.
சம்பவத்தினத்தன்று ஜெரோன்ஸ் வேலை முடித்து வீட்டிற்கு சென்றார். அப்போது போதையில் இருந்த ஜோஸ் மெர்லின் தந்தையை தகாத வார்த்தைகளால் பேசி, கையில் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார்.
இதை ஜெரோன்ஸ் தடுத்தபோது, அவரது இடது கையில் குத்து விழுந்து ரத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தந்தைக்கு மகன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் காயமடைந்த ஜெரோன்ஸ் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X