என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் 2 குளங்களில் படகு சவாரி தொடங்க திட்டம்
Byமாலை மலர்22 Jan 2022 9:03 AM GMT (Updated: 22 Jan 2022 9:03 AM GMT)
மீண்டும் உக்கடம் பெரிய குளத்தில் படகு சவாரி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை:
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி, குமாரசாமி மற்றும் செல்வம்பதி குளத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.
இதில், உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதி வண்டி பாதை, இருக்கைகள். நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், திறந்தவெளி அரங்கம், விளையாட்டு திடல், உணவுக்கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம், குளத்திற்கு வரும் கழிவுநீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல் வேறு சிறப்பு அம்சங்கள் ரூ.62.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது.
செல்வசிந்தாமணி குளம் ரூ.31.47 கோடி மதிப்பீட்டிலும், வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலை பகுதி ரூ.24.31 கோடிமதிப் பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப் பட்டது. வாலாங்குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டது. செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்கள் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப் பட்டது. இக்குளங்களில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் உக்கடம் பெரிய குளத்தில் படகு சவாரி சோதனை ஓட்டத்தில் மட்டுமே மக்கள் பயன் பாட்டிற்கு இருந்தது. நிரந்தரமாக படகு சவாரி மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து உக்கடம் பெரியகுளத்தில் மீண்டும் படகு சவாரி தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:&-
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்டுள்ள 6 குளங்களில் பொதுமக்களுக்கு எந்த வகையான கட்டணமும் விதிக்கப்படவில்லை. சென்னைக்கு அடுத்தப் படியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டது கோவை மாவட்டம் தான்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது இக்குளங்களுக்கு மக்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும்போது உக்கடம் பெரியகுளத்தில் மீண்டும் படகு சவாரி தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதே போல வாலாங்குளத்திலும் படகு சவாரி அடுத்த கட்டமாக தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X