என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டுக்கல் அருகே கோவில் உண்டியலை திருடிய மர்ம கும்பல்
Byமாலை மலர்22 Jan 2022 8:43 AM GMT (Updated: 22 Jan 2022 8:43 AM GMT)
திண்டுக்கல் அருகே கோவிலில் புகுந்து உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு பெருமாள்கோவில் பட்டியில் பேச்சியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் இருந்த உண்டியல்களை நேற்று இரவு மர்ம நபர்கள் தூக்கிச் சென்றுள்ளனர்.
காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி உண்டியல் திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் இதுகுறித்து கூறினார். தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கிடைக்கவே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தாடிக்கொம்பு எல்லைக்குட்பட்ட கோவில்கள், வணிக வளாகங்கள், காம்ப்ளக்ஸ்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர்.
ஆனால் தற்போது திருடுபோன கோவிலில் இதுவரை கேமரா பொருத்தப்படவில்லை. அதனாலேயே திருட்டு நடந்தது தெரியவந்துள்ளது. உண்டியலில் சுமார் ரூ.3 ஆயிரம் வரை பணம் இருக்கும் என்று பூசாரி தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களிடம் கலந்துபேசி விரைவில் கேமரா வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசாரிடம் ஊழியர்கள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு பெருமாள்கோவில் பட்டியில் பேச்சியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் இருந்த உண்டியல்களை நேற்று இரவு மர்ம நபர்கள் தூக்கிச் சென்றுள்ளனர்.
காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி உண்டியல் திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் இதுகுறித்து கூறினார். தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கிடைக்கவே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தாடிக்கொம்பு எல்லைக்குட்பட்ட கோவில்கள், வணிக வளாகங்கள், காம்ப்ளக்ஸ்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர்.
ஆனால் தற்போது திருடுபோன கோவிலில் இதுவரை கேமரா பொருத்தப்படவில்லை. அதனாலேயே திருட்டு நடந்தது தெரியவந்துள்ளது. உண்டியலில் சுமார் ரூ.3 ஆயிரம் வரை பணம் இருக்கும் என்று பூசாரி தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களிடம் கலந்துபேசி விரைவில் கேமரா வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசாரிடம் ஊழியர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X