search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
    X
    இரணியல் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    நாகர்கோவில் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

    நாகர்கோவில் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
    நாகர்கோவில்:

    இரணியல் அருகே தனியார் விவசாய நிலத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன.

    ஆகவே செல்போன் டவரில் இருந்து வரும் கதிர்வீச்சால் இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தக்கலை ஒன்றிய பாஜக தலைவர் மனோகரகுமார் தலைமையில்போராட்டம் நடைபெற்றது.

    உடன்முத்தலகுறிச்சி வார்டு உறுப்பினர் அன்ன குமாரி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு செல்போன் டவர் அமைக்கும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இரணியல் போலீசார் மற்றும் இரணியல்பேரூராட்சி செயல் அலுவலர் போராட்டம் நடத்தியவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    பின்பு முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்து, நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×