search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    வாகனம் மோதி ஜவுளிக்கடை உரிமையாளர் பலி

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வாகனம் மோதியதில் ஜவுளிக்கடை உரிமையாளர் பலியானார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே கந்தகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகன் கோவிந்தராஜ் (வயது25). இவர் கடத்தூரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். 

    இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சிந்தல்பாடி&அம்பலப்பட்டி  சாலையில் வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக கோவிந்தராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே  அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இந்த விபத்து குறித்து அந்த வழியாக வந்தவர்கள் உடனே மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×