search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    தேசிய பெண் குழந்தைகள் தின மாநில அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

    தேசிய பெண் குழந்தைகள் தின மாநில அரசு விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
    கரூர்:

    கரூர்  மாவட்ட  கலெக்டர் த.பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
     
    தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-&ல் மாநில அரசின் விருது -2021&ம்  ஆண்டிற்கு வழங்கப்பட  உள்ளதால்  கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் உடன் விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான தகுதிகள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு  உதவுதல், பெண் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண்   குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது  வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல்,
     
    பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களா லும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகள் அடங்கும். 

    கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாதனை புரிந்த 5 வயதிற்குமேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரினை  மாவட்ட சமூக அலுவலர் நல அலுவலகத்திற்கு நாளை மறுநாள், அதாவது ஜனவரி 23&ந்தே திக்குள் அனுப்பி வைக்குமா றும், மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு விபரம் தெரிந்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×