என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் முதல்வருக்கு கோரிக்கை
Byமாலை மலர்20 Jan 2022 9:25 AM GMT (Updated: 20 Jan 2022 9:25 AM GMT)
தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி:
தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விவசாய மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:&
தமிழ்நாடுகள் இயக்கம் மாநிலம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) கள் இறக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு எங்கள் தார்மீக ஆதரவை தெரிவித்து கொள்கிறோம். இன்றைய கால கட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் தங்களின் சொற்ப வருமானத்தில் பெரும் பங்கினை மதுவுக்கு செலவழிக்கிறார்கள்.
டாஸ்மாக் வருமானத்தில் சரிபாதி தொழிலாளர் வர்க்கம் மூலமே அரசுக்கு செல்கிறது. தற்போதைய நிலையில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது.
ஆகவே தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்கி மலிவு விலைக்கு விற்பனை செய்தால் அந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினரும் காப்பாற்றப்படுவார்கள். கற்பகதருவான பனைமரங்களின் எண்ணிக்கையும் 130 கோடியில் இருந்து 10 கோடியாக சுருங்கிவிட்டன.
கள் இறக்க அனுமதித்தால் பனை ஏறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X