என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வருசநாடு அருகே ஆக்கிரமிப்பால் நிரம்பாத குளங்கள்
Byமாலை மலர்20 Jan 2022 8:37 AM GMT (Updated: 20 Jan 2022 8:37 AM GMT)
வருசநாடு அருகே வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பால் குளங்கள் நிரம்பாமல் உள்ளது.
வருசநாடு:
அதேபோல வரத்து வாய்க்காலை ஒட்டியவாறு விளை நிலங்களுக்கு செல்வதற்கான பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரத்து வாய்க்கால் அமைக்கப்பட்ட பின்பு அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் காரணமாக தற்போது வரத்து வாய்க்காலில் செடிகள் அதிக அளவில் வளர்ந்து நீர் செல்வதற்கு தடை ஏற்படுத்தி வருகிறது.
இந்த குளங்களை சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது செடிகள் ஆக்கிரமிப்பு காரணமாக குளங்களில் முழுமையாக நீர் நிரம்பவில்லை. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் குளங்களில் போதுமான அளவு நீர் தேங்காததால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல வரத்து வாய்க்கால் அருகே அமைந்துள்ள பாதையும் மரம், செடிகள் ஆக்கிரமிப்பில் காணப்படுகிறது. இதனால் இந்த பாதையை விவசாயிகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வரத்து வாய்க்கால் மற்றும் அதன் அருகே செல்லும் பாதையில் மரம், செடிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X