என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை
Byமாலை மலர்19 Jan 2022 10:37 AM GMT (Updated: 19 Jan 2022 10:37 AM GMT)
செல்போனில் பேசியதை கண்டித்தால் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை வெள்ளலூர் அருகே உள்ள சாய் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் ஸ்ரீலட்சுமி (வயது 14).இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா 3-வது அலை காரணமாக பள்ளிகள் அடைக்கப்பட்டு உள்ளது.
இதனால் ஸ்ரீ லட்சுமி ஆன்லைன் மூலமாக பாடம் படிப்பதற்காக பெற்றோர் புதிதாக செல்போன் வாங்கி கொடுத்து இருந்தனர். இதன் மூலமாக அவர் ஆன்லைனில் பாடம் படித்து வந்தார்.
மேலும் அந்த செல்போன் மூலமாக அடிக்கடி யாருடனோ பேசி கொண்டு இருந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் ஸ்ரீ லட்சுமி மிகுந்த மனவேதனை அடைந்தார்.சம்பவத்தன்று இவரது தந்தை வெளியே சென்று இருந்தார்.
தாய் வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் உள்ள அறையில் இருந்த ஸ்ரீ லட்சுமி செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து ஸ்ரீ லட்சுமி தூக்கு போட்டு தொங்கினார். வீட்டிற்கு திரும்பிய அவரது தந்தை தனது மகள் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவரை தூக்கு கயிற்றில் இருந்து மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்ரீ லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X