என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போலீஸ்காரர் மீது நடவடிக்கை கோரி மனு
Byமாலை மலர்19 Jan 2022 10:26 AM GMT (Updated: 19 Jan 2022 10:26 AM GMT)
சமூக விரோதிகளுடன் தொடர்பு வைத்துள்ள போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்த அர்ச்சுனன் நகர் மற்றும் சுவாமிநாதன் நகர் கிராம பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வந்து திருச்சி பொன்மலை கோட்டை காவல் உதவி ஆணையரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதியில் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரராக ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் மோசடி நபர்கள், கட்டபஞ்சாயத்து செய்பவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆகியோருடன் தொடர்பு வைத்துள்ளார்.
மேலும் அவர் தீயகாரியங்களுக்கு துணை போவதால் எங்கள் பகுதி மக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது.
ஆகவே பொன்மலை காவல் உதவி ஆணையர் அந்த நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரரை வேறு இடத்திற்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X