என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற ருவாண்டா நாட்டு வாலிபர் கைது
Byமாலை மலர்19 Jan 2022 10:16 AM GMT (Updated: 19 Jan 2022 10:16 AM GMT)
சட்டவிரோதமாக தங்கியிருந்தவர் கைது செய்யப்பட்டார்
கோவை:
கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சிலர் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து சரவணம்பட்டி போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கல்லூரி முன்பு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வெளிநாட்டு வாலிபர் ஒருவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ருவாண்டா நாட்டைச்சேர்ந்த சிப்பின்ஸ் (வயது 32) என்பதும், இவர் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து முடித்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவருடைய பாஸ்போர்ட்டை டெல்லியைச் சேர்ந்த ஒருவரிடம் அடகு வைத்திருப்பதும், விசா முடிந்து 6 வருடங்களாக கோவையில் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது.
இவர் கல்லூரி மாணவர்களைப் போல கல்லூரி முன்பு நின்று கொண்டு மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்து உள்ளார். இவரிடம் இருந்து போலீசார் 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X