search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூறையாடப்பட்ட ஓட்டல்.
    X
    சூறையாடப்பட்ட ஓட்டல்.

    பரோட்டா கொடுக்க தாமதமானதால் ஓட்டல் சூறை

    ஆம்பூர் அருகே பரோட்டா கொடுக்க தாமதமானதால் ஓட்டலை கும்பல் சூறையாடினர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த குளிகை பகுதியில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்த முகமது யூனிஸ் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3 பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஓட்டலில் சென்னா மசாலா மற்றும் பரோட்டா ஆர்டர் செய்துள்ளனர் அப்போது உடனடியாக கொடுக்க வேண்டும் என கேட்டு தகராறு ஈடுபட்டனர்.

    பரோட்டா கொடுக்க தாமதமானதால் ஓட்டலில் இருந்த மேஜை நாற்காலி சமையல் பாத்திரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    மேலும் அங்கிருந்த சேர்கள் டேபிள்கள் மற்றும் ஓட்டல் பணியாளர் களை தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.

    இதுகுறித்து முகம்மது யூனிஸ் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×