search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம்

    ஜோலார்பேட்டை பகுதியில் முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பகுதியில் முககவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு 100 பேருக்கு 20 ஆயிரம் ரூபாய் போலீசார் அபராதம் விதித்தனர்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி வாகன ஓட்டிகள் அனைவரும் முக கவசம் அணிந்து வெளியில் வருவதை கண்காணிக்கவும் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், நடராஜன், அழகேசன் மற்றும் போலீசார் நேற்று பொன்னேரி மற்றும் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பல்வேறு வாகனங்களில் வாகன ஓட்டிகள் முக கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த கடந்த இரண்டு நாட்களாக 100 நபர்களுக்கு தலா 200 வீதம் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
    Next Story
    ×