என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகர்கோவில் அருகே நெல்வேலி ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் உண்டியல் கொள்ளை
Byமாலை மலர்19 Jan 2022 8:32 AM GMT (Updated: 19 Jan 2022 8:32 AM GMT)
நாகர்கோவில் அருகே நெல்வேலி ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் உண்டியலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே மார்த்தாண்டம் அடுத்த நெல்வேலி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தில் தினசரி காலை மற்றும் மாலை பூஜை நடைபெறும். விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
வழக்கம்போல் நேற்று மாலை பூஜை முடிந்தபின்பு பூசாரி கோவில் நடை அடைத்து விட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலையில் கோவிலுக்கு சென்றபோது கோவிலில் முன்பிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக உண்டியல் திறக்கப்படவில்லை ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் இருக்கும் என ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆலய துணைத்தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X