என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகர்கோவில் அருகே கல்லறை தோட்டத்தில் கோஷ்டி மோதல்,4 பேர் காயம்
Byமாலை மலர்19 Jan 2022 7:53 AM GMT (Updated: 19 Jan 2022 7:53 AM GMT)
நாகர்கோவில் அருகே கல்லறை தோட்டத்தில் கோஷ்டி மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.
நாகர்கோவில்:
கருங்கல் அருகே உள்ள அணஞ்சிகோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் பிரவின் (வயது 24). சம்பவத்தன்று இவர் தனது உறவினர்களுடன் எட்டணி சிறுகாட்டு விளையில் உள்ள தனது தாத்தா செல்லக்கண் கல்லறைக்கு மெழுகுதிரி ஏற்றிவைக்க சென்று உள்ளார்.
அப்போது அங்கு வந்த இவரது உறவினர்களான எட்டணியை சேர்ந்த வில்சன் மகன் லிபின் என்ற விஜில்குமாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது இரு தரப்பினரும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர்.
இதில் விஜில்குமார், அவரது தாயார் விஜயா மற்றும் 2 பேர் சேர்ந்து தாக்கியதில் பிரவின் மற்றும் அவரது உறவினர் காஞ்சிரங்காட்டுவிளையை சேர்ந்த சௌந்தர்ராஜ் மகன் சுனில்ராஜ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அதேபோல சிறுகாட்டுவிளையை சேர்ந்த செல்லத்துரை மனைவி லில்லி மற்றும் பிரவீன், சுனில்ராஜ் ஆகியோர் தாக்கியதில் விஜில்குமார் மற்றும் அவரது தம்பி பெர்லின் பபிரோவும் காயமடைந்தனர்.
காயமுற்ற பிரவீன், சுனில்ராஜ் ஆகியோர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், விஜில்குமார், பெப்லின் பபிரோ குளச்சல் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X