search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    வாகன விபத்தில் வாலிபர் பலி

    வாகன விபத்தில் வாலிபர் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அருந்தவபுரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் சின்னத்தம்பி என்கிற ஆரிச்சாமி (வயது19).  அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில் மகன் சூர்யா. இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில், நாமக்கல்லில் உறவினர் வீட்டு  நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தனர்.

    அய்யம்பாளையம் அருகில் சென்ற போது, முசிறியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார், இவர்கள் மீது மோதியது. இதில் சின்னத்தம்பி என்கிற ஆரிச்சாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். சூர்யா படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனை பார்த்த அப்பகுதியினர் முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், காயம் அடைந்த சூரியாவை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர்  இறந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் விதுன்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×