என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவையாறில் தியாகராஜர் ஆராதனை 22-ந் தேதி மட்டும் நடத்த முடிவு
Byமாலை மலர்12 Jan 2022 11:10 AM GMT (Updated: 12 Jan 2022 11:10 AM GMT)
குறைந்த அளவிலான இசை கலைஞர்களை கொண்டு பஞ்ச ரத்தின கீர்த்தனையும் கூடிய இசை அஞ்சலியுடன் இந்த ஆண்டு ஆராதனை விழா நிறைவுபெறுகிறது.
திருவையாறு:
திருவையாறு தியாகராஜர் சுவாமிகளின் 175-வது வருட ஆராதனை விழா வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டும், மாவட்ட கலெக்டரின் வேண்டுகோளின் படியும், ஆராதனை விழாவை தியாகராஜ சுவாமிகள் முக்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
22-ந் தேதி காலை வழக்கம் போல் உச்சவிருத்தியும் பின்னர் விழா பந்தலில் நாதஸ்வர கச்சேரியும், தியாகராஜர் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனையும் நடைபெறுகிறது. குறைந்த அளவிலான இசை கலைஞர்களை கொண்டு பஞ்ச ரத்தின கீர்த்தனையும் கூடிய இசை அஞ்சலியுடன் இந்த ஆண்டு ஆராதனை விழா நிறைவுபெறுகிறது.
விழா பந்தலுக்குள் 100 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்பதால் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று விழாக் குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
திருவையாறு தியாகராஜர் சுவாமிகளின் 175-வது வருட ஆராதனை விழா வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டும், மாவட்ட கலெக்டரின் வேண்டுகோளின் படியும், ஆராதனை விழாவை தியாகராஜ சுவாமிகள் முக்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
22-ந் தேதி காலை வழக்கம் போல் உச்சவிருத்தியும் பின்னர் விழா பந்தலில் நாதஸ்வர கச்சேரியும், தியாகராஜர் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனையும் நடைபெறுகிறது. குறைந்த அளவிலான இசை கலைஞர்களை கொண்டு பஞ்ச ரத்தின கீர்த்தனையும் கூடிய இசை அஞ்சலியுடன் இந்த ஆண்டு ஆராதனை விழா நிறைவுபெறுகிறது.
விழா பந்தலுக்குள் 100 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்பதால் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று விழாக் குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X