search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பா.ஜ.க. மனித சங்கிலி

    பிரதமர் பயண பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பஞ்சாப் மாநில அரசை கண்டித்து, திருச்சியில் பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருச்சி:

    பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்தபோது, அவருக்கு பாதுகாப்பு ஏற்பாட்டில் திடீர் குளறுபடியானது. இதற்கு பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று கூறி நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

    இந்த நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து, திருச்சி தில்லை நகரில் பா.ஜ.க.  வர்த்தக பிரிவு, ஓ.பி.சி. அமைப்பு சாரா பிரிவு சார்பாக மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. 

    போராட்டத்திற்கு மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.பி.முரளிதரன், ராம்குமார், பிரசார பிரிவு மாவட்ட தலைவர் நாகேந்திரன், அமைப்புசாரா பிரிவு மாநில தலைவர் பாண்டி, ஒ.பி.சி. மாவட்ட தலைவர் முத்துச்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்.  மாநகர மாவட்ட தலைவர்  ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 

    போராட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் இந்திரன், ஒண்டிமுத்து, பார்த்திபன், லீமா சிவகுமார், காளீஸ்வரன், கோவிந்தன், கிரிஜா, பாட்சா, இளங்கோ, மல்லி செல்வம், மகாசக்தி முருகேசன், ராஜராஜன், சந்தோஷ் குமார், 

    ஆர்.பி.பாண்டியன், கௌரி சங்கர், வெங்கபிரபு, ராஜா, விஸ்வநாதன், செந்தில், எம்பயர் கணேசன், மண்டல் தலைவர் சதீஷ், பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×