என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் ஓட்டலில் சாப்பிட சென்ற வாலிபரை தாக்கிய ஏட்டு கைது
Byமாலை மலர்12 Jan 2022 9:56 AM GMT
ஒட்டலில் சாப்பிட சென்ற வாலிபரை தாக்கிய ஏட்டுவை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை துடியலூர் அருகே உள்ள குருந்தாசாக நகரை சேர்ந்தவர் சரவண குமார் (வயது 38). சம்பவத்தன்று இவர் தனது நண்பர் தீபக் என்பவருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றார்.
அப்போது அங்கு வந்த சப்ளையரிடம் சரவணகுமார் சைவ உணவு வேண்டும் என்று கேட்டார். ஆனால் சப்ளையர் அசைவ உணவை கொண்டு வந்து கொடுத்தார். இதுகுறித்து சரவணகுமார் கேட்ட போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த ஓட்டல் உரிமையாளர் கிஷோர் (46) சரவணகுமாரை தாக்கினார். இது குறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை. பின்னர் சரவணகுமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து அவரை தாக்கிய கிஷோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஓட்டல் உரிமையாளர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஏட் டாக பணிபுரிந்து வந்தார். அப்போது அவர் மசாஜ் சென்டரில் லஞ்சம் பெற்றதாக கடந்த ஜூன் மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கிஷோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X