search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் பகுதி வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் பகுதி வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட 12 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி கரூர் வட்டாட்சியராக, அரவக்குறிச்சி வட்டாட்சியர் செ.பன்னீர்செல்வம், அங்கிருந்த  ரா.மோகன்ராஜ் தமிழ்நாடு வாணிபக்கழக கிடங்கு மேலாளராகவும், அங்கி ருந்த யசோதா கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியராகவும், அங்கிருந்த எஸ்.வெங்கடேசன் குளித்தலை வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்த ஆர்.விஜயா விடுப்பில் சென்றுள்ளார்.

    குளித்தலை ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் சு.முருகன், கரூர் மாவட்ட பேரிடர்  மேலாண்மை தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த எம்.ராஜசேகரன் அரவக்குறிச்சி வட்டாட் சியராவும், அரவக்குறிச்சி சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியர் த.சிவக்குமார், கரூர் மாவட்ட  தேர்தல் தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த இல.பிரபு, மாவட்ட ஆட்சியர் அலுவலக  மேலாளராகவும் (பொது), அங்கிருந்து கே.ஏ.சுரேஷ்குமார், கரூர் கோட்ட கலால் அலுவலராகவும்,  அங்கிருந்த எம்.பி.அமுதா, அரவக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும்  நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    கரூர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஆர்.ரவிக்குமார், கரூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த பெ.செந்தில்குமார் கரூர் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும் பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர்  பிறப்பித்துள்ளார்.
    Next Story
    ×