search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பத்தூர் தி.மு.க எம்.எல்.ஏ, போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா

    திருப்பத்தூர் தி.மு.க எம்.எல்.ஏ நல்லதம்பி, போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

    இந்த நிலையில் திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சமூக இடைவெளி முக கவசம் அணிந்து அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×