என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களியக்காவிளை பகுதியில் சாலைசீரமைப்பு பணியை ஆய்வு செய்த அதிகாரிகள்
Byமாலை மலர்11 Jan 2022 10:32 AM GMT (Updated: 11 Jan 2022 10:32 AM GMT)
களியக்காவிளை பகுதியில் சாலை சீரமைப்பு பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சாலை சீரமைப்பு பணி திருத்துவபுரம் பகுதியில் நடந்தபோது தரமற்ற முறையில் சாலைப்பணி நடைபெறுவதாக புகார் தெரிவித்து சிலர் பணியை தடுத்து நிறுத்தினர்.
இதுபற்றிய தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலை நெல்லை கண்காணிப்பு பொறியாளர் பழனியப்பன், நெல்லை தரக்கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயப்பிரகாஷ் மற்றும் குமரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் ஜெகன்மோகன் ஆகியோர் நேற்று கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலும் ஆய்வு செய்தனர். புகார் தெரிவிக்கப்பட்ட திருத்துவபுரம் பகுதியிலும் ஆய்வு செய்தனர்.
பின்னர் கோட்டப் பொறி யாளர் ஜெகன்மோகன் கூறும்போது, சாலை சீரமைப்பு பணி தரமான முறையில்தான் நடந்துள்ளது. இதை உயர் அதிகாரிகள் நெல்லையில் இருந்து வந்து தரப்பரிசோதனை செய்தனர். இதில் சாலை தரமாக அமைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றார்.
இது தொடர்பாக இந்த சாலைப்பணியின் ஒப்பந்ததாரர் கைலாஷ்குமார் கூறும்போது, அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் இந்த சாலைப்பணி செய்யப்பட் டுள்ளது. ஆனால் சிலர் வேண்டும் என்றே தவறான தகவலை பரப்பினர். இதனை யாரும் நம்ப வேண்டாம். இந்த சாலைப் பணியின் தரத்துக்கு நான் பொறுப்பு என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X