search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்

    திருச்சியில் 2 குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கிருத்திகா (வயது 28). இந்த தம்பதிக்கு சத்தியப்பிரியன் (12), சாய் சிவா (5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    கிருத்திகா வயலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற கிருத்திகா தாமதமாக வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் கணவர் செந்தில்குமார், கிருத்திகாவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த கிருத்திகா, தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றவர், பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால், செந்தில்குமார் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சப்- இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து கிருத்திகா மற்றும் அவரது மகன்களை தேடி வருகிறார். 2 குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×