என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்
Byமாலை மலர்11 Jan 2022 10:10 AM GMT (Updated: 11 Jan 2022 10:10 AM GMT)
திருச்சியில் 2 குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கிருத்திகா (வயது 28). இந்த தம்பதிக்கு சத்தியப்பிரியன் (12), சாய் சிவா (5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
கிருத்திகா வயலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற கிருத்திகா தாமதமாக வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் கணவர் செந்தில்குமார், கிருத்திகாவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த கிருத்திகா, தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றவர், பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால், செந்தில்குமார் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சப்- இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து கிருத்திகா மற்றும் அவரது மகன்களை தேடி வருகிறார். 2 குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கிருத்திகா (வயது 28). இந்த தம்பதிக்கு சத்தியப்பிரியன் (12), சாய் சிவா (5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
கிருத்திகா வயலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற கிருத்திகா தாமதமாக வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் கணவர் செந்தில்குமார், கிருத்திகாவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த கிருத்திகா, தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றவர், பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால், செந்தில்குமார் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சப்- இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து கிருத்திகா மற்றும் அவரது மகன்களை தேடி வருகிறார். 2 குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X