என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பள்ளி அருகே டாஸ்மாக் கடை அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு
Byமாலை மலர்11 Jan 2022 8:37 AM GMT (Updated: 11 Jan 2022 8:37 AM GMT)
கம்பத்தில் பள்ளி அருகே டாஸ்மாக் கடை அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர்பாளையம் சாலையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த சாலையில் கம்பம் நகராட்சி எரிவாயு தகன மேடை எதிரே அரசு டாஸ்மாக் கடை அமைப்பதற்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் குற்றச்சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரிக்கும் என்பதால் டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் தபால் அட்டைகளில் புகார் மனுக்களை எழுதி மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட கலெக்டரும் இது குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பதிவு தெரிவித்துள்ளார். இது குறித்து மாணவ, மாணவிகள் தெரிவிக்கையில், புதிதாக அமையவிருக்கும் டாஸ்மாக் கடை அருகே 2 மேல்நிலைப்பள்ளிகள், சத்துணவுகூடம், மக்கள் குடியிருப்பு பகுதி ஆகியவை உள்ளன.
எனவே இங்கு அமைய உள்ள கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக முதல்வருக்கும் புகார் அளிக்க உள்ளோம் என்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர்பாளையம் சாலையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த சாலையில் கம்பம் நகராட்சி எரிவாயு தகன மேடை எதிரே அரசு டாஸ்மாக் கடை அமைப்பதற்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் குற்றச்சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரிக்கும் என்பதால் டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் தபால் அட்டைகளில் புகார் மனுக்களை எழுதி மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட கலெக்டரும் இது குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பதிவு தெரிவித்துள்ளார். இது குறித்து மாணவ, மாணவிகள் தெரிவிக்கையில், புதிதாக அமையவிருக்கும் டாஸ்மாக் கடை அருகே 2 மேல்நிலைப்பள்ளிகள், சத்துணவுகூடம், மக்கள் குடியிருப்பு பகுதி ஆகியவை உள்ளன.
எனவே இங்கு அமைய உள்ள கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக முதல்வருக்கும் புகார் அளிக்க உள்ளோம் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X