search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தென்காசியில் நாளை நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு

    தென்காசி மாவட்ட நிர்வாகம் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நாளை நடத்துவதாக இருந்தது. நாளை முழு ஊரடங்கு என்பதால் அது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
    தென்காசி:

    தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வைத்து நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

    தற்போது கொரோனா தொற்று வழிகாட்டும் நெறிமுறைகளின்படி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×