என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆலங்குளம் அருகே கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
Byமாலை மலர்8 Jan 2022 9:34 AM GMT (Updated: 8 Jan 2022 9:34 AM GMT)
ஆலங்குளம் அருகே கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள அகரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவரது மகன் தங்கராஜ்(வயது 12).
இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று சிறுவன் தங்கராஜ், தனது வீட்டுக்கு பின்புறம் செல்லும் நெட்டூர் கால்வாய்க்கு குளிக்க சென்றுள்ளான்.
நீண்ட நேரமாகியும் அவன் வீட்டுக்கு திரும்பி வராததால், அவனது பெற்றோர் கால்வாய்க்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது தங்கராஜ் தண்ணீரில் பிணமாக மிதந்துள்ளான்.
உடனே அவனது பெற்றோர் தங்கராஜ் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவனது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுவன் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X