என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலத்தில் 40 கிலோ வெள்ளியுடன் மாயமான தொழிலாளி கைது
Byமாலை மலர்8 Jan 2022 9:23 AM GMT (Updated: 8 Jan 2022 9:23 AM GMT)
சேலத்தில் 2 ஆண்டுக்கு முன்பு 40 கிலோ வெள்ளியுடன் மாயமான தொழிலாளி இன்று கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் வெள்ளி கட்டிகளை வாங்கி கொலுசாக செய்து வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 2019 ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பிரபு (வயது 42) என்பவர் தேவேந்திரனிடம் 40 கிலோ வெள்ளி கட்டியை வாங்கிவிட்டு வெள்ளி கொலுசு செய்து வருவதாக கூறி சென்றார். ஆனால் பல மாதம் ஆகியும் வெள்ளி கொலுசு செய்து கொடுக்கவில்லை.
இதுபற்றி தேவேந்திரன் பலமுறை கேட்டார். ஆனால் அவர் வெள்ளி கொலுசை செய்து கொடுக்காமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து தேவேந்திரன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 2 ஆண்டுகளாக பிரபுவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்து ஓட்டலில் வேலை செய்த பிரபுவை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X