என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு இல்லை
Byமாலை மலர்8 Jan 2022 4:27 AM GMT (Updated: 8 Jan 2022 4:27 AM GMT)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.
திருச்சி:
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த அவரை கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதைதொடர்ந்து விருதுநகர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியை ஆஜர் செய்து மதுரை மத்திய ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையே பாதுகாப்பு கருதி அவரை நேற்று முன்தினம் திருச்சிக்கு கொண்டு வந்து மத்திய ஜெயிலில் அடைத்தனர். இங்கு உயர் பாதுகாப்பு தொகுதி எண் 2-ல் அறை 4-ல் அடைக்கப்பட்டார். இந்த தொகுதியில் ஏற்கனவே சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் அடைக்கப்பட்டு இருந்தார்.
உயர் பாதுகாப்பு தொகுதி 2-ல் 6 அறைகள் உள்ளன. இதில் ராஜேந்திர பாலாஜியை தவிர்த்து வேறு கைதிகள் இல்லை. நேற்று 2-வது நாளாக வழக்கம்போல் சர்க்கரை, ரத்தகொதிப்பு, நோய்க்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டார். ஜெயிலில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் ரிசல்ட் இன்று வந்தது. அதில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. இதனால் அவரை வேறு அறைக்கு மாற்றப்போவதில்லை. 20-ந்தேதி வரை உயர் பாதுகாப்பு தொகுதியிலேயே அடைக்கப்பட்டு இருப்பார் என ஜெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த அவரை கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதைதொடர்ந்து விருதுநகர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியை ஆஜர் செய்து மதுரை மத்திய ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையே பாதுகாப்பு கருதி அவரை நேற்று முன்தினம் திருச்சிக்கு கொண்டு வந்து மத்திய ஜெயிலில் அடைத்தனர். இங்கு உயர் பாதுகாப்பு தொகுதி எண் 2-ல் அறை 4-ல் அடைக்கப்பட்டார். இந்த தொகுதியில் ஏற்கனவே சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் அடைக்கப்பட்டு இருந்தார்.
உயர் பாதுகாப்பு தொகுதி 2-ல் 6 அறைகள் உள்ளன. இதில் ராஜேந்திர பாலாஜியை தவிர்த்து வேறு கைதிகள் இல்லை. நேற்று 2-வது நாளாக வழக்கம்போல் சர்க்கரை, ரத்தகொதிப்பு, நோய்க்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டார். ஜெயிலில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் ரிசல்ட் இன்று வந்தது. அதில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. இதனால் அவரை வேறு அறைக்கு மாற்றப்போவதில்லை. 20-ந்தேதி வரை உயர் பாதுகாப்பு தொகுதியிலேயே அடைக்கப்பட்டு இருப்பார் என ஜெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X