search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

    வீட்டில் மதுபதுக்கி வைத்து விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    அன்னதானப்பட்டி, ஜன.5

    சேலம் லைன்மேடு  வேலு புதுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (வயது 38).  இவர்  டாஸ்மாக் கடைகளில்  மது பாட்டில்கள் வாங்கி வந்து தனது வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் பதுக்கி வைத்து அதிக விலை வைத்து விற்பனை செய்து வருவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வியை கைது செய்தனர். முன்னதாக அங்கு போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்த 15 மது பாட்டில்களை மர்ம நபர்கள்  திருடிச் சென்று விட்டனர்.  இது குறித்து  போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×