search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    அவினாசியில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து- ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து செயல்பட்டு 15 நிமிடத்திற்குள் தீயை அணைத்தனர்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி கால்நடை மருத்துவமனை அருகே எலக்ட்ரிக்கல் மற்றும் பழுதுநீக்கும் கடை செயல்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இன்று மாலை திடீரென இந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டது.  

    மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் பல்வேறு பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. உடனே அவிநாசி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து செயல்பட்டு 15 நிமிடத்திற்குள் தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த தீ விபத்தால் கடையில் இருந்த எந்திரங்கள் உட்பட சுமார் ரூ. 5 லட்சம்  மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து அவிநாசி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
    Next Story
    ×