என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![தெற்கு ரெயில்வே தெற்கு ரெயில்வே](https://img.maalaimalar.com/Articles/2021/Dec/202112311422542078_Tamil_News_Tamil-news-2-unreserved-compartment-in-41-trains-Southern_SECVPF.gif)
X
தெற்கு ரெயில்வே
41 ரெயில்களில் 2 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு
By
மாலை மலர்31 Dec 2021 8:52 AM GMT (Updated: 31 Dec 2021 8:52 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கோயம்புத்தூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தலா 2 பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக 1-ந்தேதி முதல் பயன்பாட்டில் வருகிறது.
நாகர்கோவில்:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கும் முறை ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் அந்த பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாகவும் இருந்தது. இந்த நிலையில் ரெயில்களில் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளை பயன்பாட்டில் கொண்டு வர ரெயில்வே முன் வந்துள்ளது.
39 ரெயில்களில் நாளை (1-ந்தேதி) முதலும், பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4-ந்தேதி முதலும் என்று மொத்தம் 41 ரெயில்களில் இது பயன்பாட்டிற்கு வருகிறது. அந்த வகையில் திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி ரெயில்களில் தலா 2 பெட்டிகள் நாளை முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக பயன்பாட்டில் இருக்கும்.
![முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக 1-ந்தேதி முதல் பயன்பாட்டில் வருகிறது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக 1-ந்தேதி முதல் பயன்பாட்டில் வருகிறது.](https://img.maalaimalar.com/InlineImage/202112311422542078_1_train123._L_styvpf.jpg)
மங்களூர்-நாகர்கோவில், நாகர்கோவில்-மங்களூர் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4-ந்தேதி முதல் 2 பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இருக்கும். மங்களூர் சென்ட்ரல்- நாகர்கோவில், நாகர்கோவில்- மங்களூர் சென்ட்ரல் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தலா 2 பெட்டிகளும், நாகர்கோவில்-கோட்டயம் பயணிகள் ரெயிலில் 2 பெட்டிகளும், நாகர்கோவில்- கோயம்புத்தூர், கோயம்புத்தூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தலா 2 பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக 1-ந்தேதி முதல் பயன்பாட்டில் வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)