என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடம் அரசு பள்ளிக்கு கட்டிட வசதி கோரி மனு
Byமாலை மலர்27 Dec 2021 10:20 AM GMT (Updated: 27 Dec 2021 10:20 AM GMT)
பல்லடம் அண்ணா நகரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி 2018ம் ஆண்டு நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
திருப்பூர்:
பல்லடம் அண்ணாநகர் அரசு பள்ளிக்கு கட்டிட வசதி கோரி அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பல்லடம் அண்ணா நகரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி 2018 ம் ஆண்டு நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளிக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளியில் 5 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது.
மற்ற கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளதால் அங்கு வகுப்பறைகள் செயல்படவில்லை. இதனால் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர்களும் அவதி அடைகின்றனர்.
மேலும் மழை, வெயில் காலங்களில் வகுப்புகள் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போதிய கழிப்பிட வசதியும் இல்லாத காரணத்தால் மாணவ-, மாணவிகள் ஒரே கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்.
பள்ளிக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டவும், கழிப்பறை வசதி செய்து தரவும் வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X