என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காய்கறிகள் சிப்பம் கட்டும் அறை அமைக்க மானியம்
Byமாலை மலர்27 Dec 2021 7:41 AM GMT (Updated: 27 Dec 2021 7:41 AM GMT)
2 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தண்ணீர் தொட்டி, கதவு, ஆறு ஜன்னல்கள், காய்கறிகளை தரம் பிரிக்க மேஜை, மின்விசிறி, காய்கறிகளை எடை போட எடை பார்க்கும் தராசு, ஆகியவற்றுடன் அமைக்கவேண்டும்.
பல்லடம்:
காய்கறிகளை சிப்பம் கட்டும் அறை அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெரீனா பேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை தரம்பிரித்து சிப்பம் கட்டும் அறை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சிப்பம் கட்டும் அறை 600 சதுர அடியில் அமைக்க வேண்டும்.
2 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தண்ணீர் தொட்டி, கதவு, ஆறு ஜன்னல்கள், காய்கறிகளை தரம் பிரிக்க மேஜை, மின்விசிறி, காய்கறிகளை எடை போட எடை பார்க்கும் தராசு, ஆகியவற்றுடன் அமைக்கவேண்டும்.
இந்தத் திட்டத்தின்படி மானியம் பெற விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதார் அட்டை, ரேசன் அட்டை, வங்கி கணக்கு புத்தகநகல், போட்டோ, ஆகியவற்றுடன் பல்லடம் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X