என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கருங்கலில் ஏ.சி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்26 Dec 2021 9:33 AM GMT (Updated: 26 Dec 2021 9:33 AM GMT)
கருங்கலில் கடன் பிரச்சனை காரணமாக ஏ.சி.மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்கல்:
கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் பாலக்காவிளையை சேர்ந்தவர் சுஜின் (வயது 33). இவர் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஆஷா (26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. சுஜினுக்கு குடிப்பழக்கம் உண்டு. அதோடு கடன் பிரச்சினையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுஜின் தனது மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். பூட்டேற்றியில் உள்ள சிவன் கோவில் அருகில் சுஜின் விஷ மருந்தை தின்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆஷா கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொலையாவட்டம் ஆப்பிகோடு பகுதியை சேர்ந்தவர் அம்புறோஸ் (வயது 74). இவரது மனைவி சில மாதங்களுக்கு முன் இறந்தார். இதனால் அம்புரோஸ் மனமுடைந்து காணப்பட்டார். தற்போது அவர் கம்பிளார் பகுதியில் உள்ள அவரது மகன் வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று அவர் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதனை கண்டவர்கள் அவரை கருங்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏதோ விஷ மருந்து சாப்பிட்டிருக்கலாம் எனவும் அபாய கட்டத்தில் இருப்பதாக கூறி மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இச்சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மனைவி இறந்த சோகத்தில் கணவரும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் பாலக்காவிளையை சேர்ந்தவர் சுஜின் (வயது 33). இவர் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஆஷா (26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. சுஜினுக்கு குடிப்பழக்கம் உண்டு. அதோடு கடன் பிரச்சினையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுஜின் தனது மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். பூட்டேற்றியில் உள்ள சிவன் கோவில் அருகில் சுஜின் விஷ மருந்தை தின்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆஷா கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொலையாவட்டம் ஆப்பிகோடு பகுதியை சேர்ந்தவர் அம்புறோஸ் (வயது 74). இவரது மனைவி சில மாதங்களுக்கு முன் இறந்தார். இதனால் அம்புரோஸ் மனமுடைந்து காணப்பட்டார். தற்போது அவர் கம்பிளார் பகுதியில் உள்ள அவரது மகன் வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று அவர் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதனை கண்டவர்கள் அவரை கருங்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏதோ விஷ மருந்து சாப்பிட்டிருக்கலாம் எனவும் அபாய கட்டத்தில் இருப்பதாக கூறி மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இச்சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மனைவி இறந்த சோகத்தில் கணவரும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X