search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காக்கடா  பூ
    X
    காக்கடா பூ

    மல்லிகை வரத்து குறைவால் காக்கடா பூவுக்கு திடீர் மவுசு

    மார்கழி மாதம் பிறப்பு முதல் 100 கிலோவுக்கும் குறைவாக மல்லிகை பூக்கள் வருவதால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு 2 டன் மல்லிகை பூ விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது கடும் பனிப்பொழிவால் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக  மார்கழி மாதம் பிறப்பு முதல் 100 கிலோவுக்கும் குறைவாக மல்லிகை பூக்கள் வருவதால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,200 முதல் ரூ.1,800  வரை விற்கிறது. தற்போது  மல்லிகை பூ இல்லாததால் அதற்கு  மாற்றாக  காக்கடா பூவுக்கு மவுசு கூடியுள்ளது.

    வழக்கமாக கிலோ  ரூ.150க்கு விற்கப்படும் காக்கடா பூ தற்போது 250 கிராம் ரூ. 70க்கும், கிலோ ரூ.280க்கும் விற்கிறது. அதனை பலர் வாங்கி செல்கின்றனர். இருப்பினும்  சிலர் வாங்கி செல்வதை தவிர்க்கின்றனர்.
    Next Story
    ×