என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவில் அருகே இரும்பு கம்பி திருடியவர் கைது
Byமாலை மலர்24 Dec 2021 10:55 AM GMT (Updated: 24 Dec 2021 10:55 AM GMT)
கோபிநாத் வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள புதுப்பை வரதராஜ பெருமாள் கோவில் முன்பு சமுதாய கூடம் கட்டுவதற்கு மூலனூர் அருகே உள்ள சாணார்பாளையத்தை சேர்ந்த கோபிநாத் (வயது 32) என்பவர் ஒப்பந்தம் எடுத்திருந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு அதற்கு தேவையான கம்பி, செங்கல் மற்றும் கட்டுமான பொருட்களை வாங்கி கோவில் அருகில் போட்டிருந்தார். இந்நிலையில் 2019ம் ஆண்டு கொரோனா காலமாக இருந்ததால் போதிய நிதி பெற முடியாததால் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் இருந்தது.
இதனையடுத்து 2 தினங்களுக்கு முன்பு மூலனூர் அருகே உள்ள எரிசனம்பாளையம் சக்திவேல் (53) என்பவர் சமுதாயம் கூடம் அருகே கிடந்த இரும்பு கம்பியை திருடிச்சென்றுள்ளார். இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கோபிநாத் வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X