என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தாராபுரம் அமராவதி ஆற்றில் பெண் பிணம் - போலீசார் விசாரணை
Byமாலை மலர்22 Dec 2021 9:08 AM GMT (Updated: 22 Dec 2021 9:08 AM GMT)
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றின் பழைய பாலத்தின் கீழ் இறந்த நிலையில் பெண்ணின் உடல் ஒன்று ஆற்றுநீரில் மிதந்து வந்ததுடன், ஆழமான பகுதியில் உள்ள முட்புதரில் சிக்கியது.
இதையறிந்த தாராபுரம் போலீசார் மற்றும் தாராபுரம் தீயணைப்பு துறையினர் அமராவதி ஆற்றுக்கு விரைந்து வந்து ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும்.
அவரது பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. எப்படி இறந்தார் என்றும் தெரியவில்லை. ஆற்றில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 19-ந்தேதி தாராபுரத்தில் சுஜாதா என்ற பெண் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்டார். இந்தநிலையில் இன்று மற்றொரு பெண் ஆற்றில் பிணமாக கிடந்தது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X