search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலையில் கஞ்சா வைத்திருந்த பெண் கைது

    போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தீஸ்வரியை கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
    உடுமலை:

    உடுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் குற்ற தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொள்ளாச்சி சாலையில் வெனசுபட்டி பிரிவில் செல்லும் போது சந்தேகப்படும்படி நின்ற பெண்ணை பிடித்து விசாரித்தார். 

    விசாரணையில் அவர் முக்கோணம் பகுதியை சேர்ந்த கார்த்தீஸ்வரி ( வயது 42 ) என்பதும், அவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
    Next Story
    ×