search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை செய்யப்பட்ட கார்த்தி.
    X
    கொலை செய்யப்பட்ட கார்த்தி.

    சேவல் திருடியதை தட்டிக்கேட்ட வாலிபர் குத்திக்கொலை

    மங்கலம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் திருடி சென்றது தெரியவந்தது.
    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் இச்சுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி என்கிற குட்டி கார்த்தி (வயது  23). இவர் சேவல் வளர்த்து வந்தார். இந்தநிலையில் அவரது சேவல் திடீரென காணாமல் போனது.

    அதனை மங்கலம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (20) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கார்த்தி மங்கலத்தில் உள்ள பிரேம்குமார் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரேம்குமார் கத்தியால் கார்த்தியை சரமாரி குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

    இதையடுத்து கொலையை மறைக்க பிரேம்குமாரின் பெற்றோர் தங்கபாண்டி, மகாலட்சுமி ஆகியோர் மங்கலம் போலீசாருக்கு, அடையாளம் தெரியாத வாலிபர் இறந்து கிடக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். 

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். மேலும் தகவல் தெரிவித்த பிரேம்குமாரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவிக்கவே போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் பிரேம்குமார் கொலை செய்ததும் அதனை அவரது பெற்றோர் மறைக்க நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கார்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
    Next Story
    ×