என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மழையால் தொழில் பாதிப்பு - அரசு நிவாரணம் வழங்க செங்கல்சூளை தொழிலாளர்கள் கோரிக்கை
Byமாலை மலர்8 Dec 2021 7:59 AM GMT (Updated: 8 Dec 2021 7:59 AM GMT)
இரண்டு மாதமாக தொடர் மழையால் வேலையின்றி குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதமாக தொடர் மழை காரணமாக செம்மண் மற்றும் களிமண் கலந்த கலவையிலான செங்கல் அச்சில் கற்கள் அறுக்க முடியவில்லை.
தயாரிக்கப்பட்ட கற்களை சுத்தம் செய்து 7 நாட்கள் வெயிலில் காய வைத்து பின்னர் சூளையில் அடுக்க வேண்டும். வெயில் அதிகமாக இல்லாததால் கற்கள் காயவைக்க முடியவில்லை. இதனால் சூளை வைப்பதில் மாதக்கணக்கில் இழுபறி ஏற்படுகிறது.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:
செங்கல் அறுக்கும் தொழிலில் வேலை பார்த்து வருகிறோம். இரண்டு மாதமாக தொடர் மழையால் வேலையின்றி குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது. எனவே எங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க உள்ளோம் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X