search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டுக்குட்டி
    X
    ஆட்டுக்குட்டி

    மேலூர் சந்தையில் வாங்கிய ஆட்டுக்குட்டியை பஸ்சில் கொண்டு செல்ல முடியாமல் தவித்த மூதாட்டி

    மேலூரில் இருந்து மதுரை செல்லும் டவுன் பஸ்சில் ஏறி அந்த ஆட்டுக்குட்டியை மடியில் வைத்து கொண்டு அமர்ந்திருந்தார். இதனை பார்த்த கண்டக்டர் அந்த மூதாட்டியையும், ஆட்டுக்குட்டியும் ஏற்ற முடியாது என கூறி, கீழே இறக்கி விட்டார்.
    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது சிட்டம்பட்டியை அடுத்துள்ளது பூலாம்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது65). இவர் ஆட்டுக்குட்டி வாங்குவதற்காக மேலூரில் இன்று நடைபெற்ற கால்நடை வாரச்சந்தைக்கு வந்து, அங்கு சிறிய ஆட்டுக் குட்டி ஒன்றை ரூ.1400-க்கு வாங்கினார்.

    பின்னர் வாங்கிய அந்த ஆட்டுக்குட்டியை மேலூரில் இருந்து மதுரை செல்லும் டவுன் பஸ்சில் ஏறி அந்த ஆட்டுக்குட்டியை மடியில் வைத்து கொண்டு அமர்ந்திருந்தார். இதனை பார்த்த கண்டக்டர் அந்த மூதாட்டியையும், ஆட்டுக்குட்டியும் ஏற்ற முடியாது என கூறி, கீழே இறக்கி விட்டார்.

    ஆட்டுக்குட்டியை விலை கொடுத்து வாங்கிய அந்த மூதாட்டி வீட்டுக்கு செல்வதற்கு வேறு வழியில்லாமல் பஸ்சில் ஏற முடியாமல் தவித்தார். அப்போது அங்கிருந்தவர்கள், கட்டை பையை வாங்கி அதற்குள் ஆட்டுக்குட்டியை போட்டு மடியில் தூக்கி வைத்து செல்லுமாறு யோசனை கூறினர். அதன்படி அருகில் உள்ள கடைக்கு சென்று கட்டை பையை வாங்கி அதில் ஆட்டுக்குட்டியை போட்டு மீண்டும் மேலூரில் இருந்து மதுரை செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறி அமர்ந்து ஒரு வழியாக ஆட்டுக்குட்டியுடன் வீட்டுக்கு சென்றார்.
    Next Story
    ×