என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பூலாம்பட்டி அருகே காவிரி ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி பஸ் டிரைவர் பலி
Byமாலை மலர்6 Dec 2021 7:22 AM GMT (Updated: 6 Dec 2021 7:22 AM GMT)
பூலாம்பட்டி அருகே காவிரி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது கல்லூரி பஸ் டிரைவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி கதவணை பகுதியிலுள்ள படகுத்துறையில் இன்று காலை ஆண் பிணம் மிதந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆற்றில் மிதந்த பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் ஆற்றில் சடலமாக மிகுந்தவர் சத்தியசீலன் (வயது36) என்பது தெரியவந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பெருமாகவுண்டம்பாளையம், கே.குட்டை பகுதியைச் சேர்ந்த சத்தியசீலனுக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனியார் கல்லூரி வாகனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். தினமும் கல்லூரியிலிருந்து பூலாம்பட்டி பகுதிக்கு மாணவர்களை அழைத்து வரும் சத்தியசீலன், மாணவர்களை இறக்கி விட்ட பின், பூலாம்பட்டி பஸ் நிலையத்தில் கல்லூரி பேருந்தை நிறுத்திவிட்டு பஸ்சிலேயே இரவு தூங்குவது வழக்கம்.
இதேபோல் நேற்று இரவும் சத்தியசீலன் தான் ஓட்டி வந்த கல்லூரி பஸ்சை பூலாம்பட்டி பஸ் நிலையத்தில் நிறுத்தினார். இந்த நிலையில் தான் அவர் ஆற்றில் பிணமாக கிடந்துள்ளார்.
இதை தொடர்ந்து சத்தியசீலன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பூலாம்பட்டி போலீசார், இதுகுறித்து வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சத்தியசீலன் இரவு நேரத்தில் இயற்கை உபாதைக்காக ஆற்றங்கரை பகுதிக்கு சென்ற போது காவிரி ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவர் இறப்பிற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி கதவணை பகுதியிலுள்ள படகுத்துறையில் இன்று காலை ஆண் பிணம் மிதந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆற்றில் மிதந்த பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் ஆற்றில் சடலமாக மிகுந்தவர் சத்தியசீலன் (வயது36) என்பது தெரியவந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பெருமாகவுண்டம்பாளையம், கே.குட்டை பகுதியைச் சேர்ந்த சத்தியசீலனுக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனியார் கல்லூரி வாகனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். தினமும் கல்லூரியிலிருந்து பூலாம்பட்டி பகுதிக்கு மாணவர்களை அழைத்து வரும் சத்தியசீலன், மாணவர்களை இறக்கி விட்ட பின், பூலாம்பட்டி பஸ் நிலையத்தில் கல்லூரி பேருந்தை நிறுத்திவிட்டு பஸ்சிலேயே இரவு தூங்குவது வழக்கம்.
இதேபோல் நேற்று இரவும் சத்தியசீலன் தான் ஓட்டி வந்த கல்லூரி பஸ்சை பூலாம்பட்டி பஸ் நிலையத்தில் நிறுத்தினார். இந்த நிலையில் தான் அவர் ஆற்றில் பிணமாக கிடந்துள்ளார்.
இதை தொடர்ந்து சத்தியசீலன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பூலாம்பட்டி போலீசார், இதுகுறித்து வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சத்தியசீலன் இரவு நேரத்தில் இயற்கை உபாதைக்காக ஆற்றங்கரை பகுதிக்கு சென்ற போது காவிரி ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவர் இறப்பிற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X