என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.4 லட்சம் கொள்ளை
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் திருமலை அவன்யூ 3-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் ரெட்டி (வயது70). தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் ஆந்திர மாநிலம் ஓங்கோல் என்ற இடத்தில் வீடு கட்டி வருகிறார். திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த தனது நண்பரிடம் வீடு கட்ட ரூ. 4 லட்சம் கடன் கேட்டார்.
இதையடுத்து அவர் திருவொற்றியூர் பெரியார் நகரில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.4 லட்சம் பணத்தை எடுத்து, பிரகாஷ் ரெட்டியிடம் கொடுத்தார். இதையடுத்து பிரகாஷ் ரெட்டி தனது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் ரூ.4 லட்சத்தை வைத்துக்கொண்டு வந்தார்.
திருவொற்றியூர் கே. ஜி. எல். லாட்ஜ் அருகே உள்ள டீக்கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தனது நண்பரான வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.4 லட்சத்தை காணவில்லை. மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.இது குறித்து பிரகாஷ் ரெட்டி திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்குள்ள சி. சி. டி. வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்