search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரே‌ஷன் அரிசி
    X
    ரே‌ஷன் அரிசி

    திருப்பத்தூர் அருகே 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- ஒருவர் கைது

    திருப்பத்தூர் அருகே 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே மாடப்பள்ளி கிராமம், அண்ணாநகா் பகுதியிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருப்பதாக திருப்பத்தூர் வட்ட வழங்கல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு 6 டன் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அரிசி கடத்தலுக்கு துணையாக இருந்த சிந்து என்கிற சிந்தனைசெல்வம் (வயது 21) என்பவரை கைது செய்த திருப்பத்தூர் தாலுகா போலீசார், தலைமறைவான அவரது பாட்டியை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×