என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மெரினாவில் ரூ.35 கோடியில் கலைஞர் நினைவிடம்- டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
Byமாலை மலர்1 Dec 2021 5:21 PM GMT (Updated: 1 Dec 2021 5:21 PM GMT)
சென்னை மெரினாவில் ரூ.35 கோடி மதிப்பில் அமைக்கப்படும் கலைஞர் நினைவிடத்திற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், கலைஞர் ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்படங்களுடன் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதனையடுத்து, ரூ.35 கோடி மதிப்பில் அமைக்கப்படும் கலைஞர் நினைவிடத்திற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. வருகின்ற டிசம்பர் 28ம் தேதி வரை கலைஞர் நினைவிடத்துக்கான டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X