search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் ஆர்ப்பாட்டம்
    X
    கரூர் ஆர்ப்பாட்டம்

    பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்த மாணவிகளுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

    பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவிகளுக்கு நீதி கேட்டு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கரூர்:

    பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவிகளுக்கு நீதி கேட்டு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாணவிகளின் தற்கொலைக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பள்ளி-கல்லூரிகளில் பாலியல் வன்கொடுமையை தடுக்க குழுக்களை ஏற்படுத்த வேண்டும். 

    வன்கொடுமைகள் நிகழும் பள்ளி-கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரித்து நீதி வழங்க தனி நீதிமன்றங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தேசிய குழு உறுப்பினர் பிலோமினா தலைமை வகித்தார். மாநில அமைப்பு குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, அகில இந்திய மாணவர் கழகம் மெஜோ, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×