search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதானவர்களை படத்தில் காணலாம்.
    X
    கைதானவர்களை படத்தில் காணலாம்.

    பல்லடத்தில் மூதாட்டியிடம் நகைபறித்த பெண் உள்பட 3 பேர் கைது

    தெய்வாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி சாமிகவுண்டம்பாளையம்புதூரை சேர்ந்த கருப்புசாமி மனைவி தெய்வாத்தாள் (வயது81). இவர் கடந்த மாதம் 22-ந்தேதி இவரது வீட்டு அருகேயுள்ள ரோட்டில் நடந்து சென்றபோது 2 வாலிபர்கள் தெய்வாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர். 

    இதுகுறித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். 

    இந்நிலையில் போலீசார் வழக்கில் தீவிர விசாரணை செய்து பொள்ளாச்சியை சேர்ந்த சூர்யா என்ற ஜெகதீஷ் (27), விக்னேஷ் (22) மற்றும் வழிப்பறிக்கு உடந்தையாக இருந்த சரஸ்வதி (49) ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×